ஒட்டுசுட்டானில் குடும்பஸ்தரின் தவறான முடிவு!

0
383

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரைஏக்கர் சிவநகர் ஒட்டுசுட்டானை சேர்ந்த தெய்வேந்திரம் ரஜீவ் என்ற குடும்பஸ்தர் உளவளசிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது உயிரிழப்பு தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசேதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மரணவிசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.