102 ரயில் பயணங்கள் இன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது

0
577

இன்று காலை 6.15 மணிக்கு புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக இன்று 102 புகையிரத பயணங்கள் இடம்பெறவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இதற்கிடையில், பயணிகள் புகையிரத செயல்பாடுகள் குறித்து விசாரிக்க 1971 நுகர்வோர் சேவைகள் ஹொட்லைனை தொடர்பு கொள்ளலாம்.