10 பிரபல சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்

0
165

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து புதிய சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார். அவர்கள் விரைவில் உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பதவிப்பிரமாணத்தின் பின் அவர்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள். இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டவர்களின் பெயர் விபரம் வருவாறு, சமந்த வீரகோன், கலாநிதி அசங்க குணவன்ச, மொஹமட் அடமலி, ஹர்ஷ பெர்னாண்டோ, கலாநிதி சிவாஜி பீலிக்ஸ், பைசா மார்க்கர், கௌசல்யா நவரத்ன, உபுல் குமாரப்பெரும, விரான் கொரியா மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.