மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

0
136

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பும் வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகள் கொந்தளிப்பாக உள்ளன.இதனால், அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடித்தல் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு, மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.