பிரதமரின் சொற்படி செயற்பட்டு வரும் ஜனாதிபதி! அமெரிக்காவின் அரசியல்துறை பேராசிரியர் தெரிவிப்பு

0
540

அரசாங்கத்தின் உண்மையான தலையென்பது இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவினுடையது. இவரை மீறி முடிவெடுக்க முடியாது நிலையில் கோட்டாபய – பசில் ஆகியோர் செயற்பட்டு வருவதாக அமெரிக்காவின் சாஷ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கி வரும் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச என்பவர் இயல்பாகவே சீன சார்பான தலைவர். அவர் திடீரென மாற்றமடைந்து சீனாவிடமிருந்து விலகி செயற்படுவதென்பது நடக்காத விடயம்.