பம்பலப்பிட்டி மேம்பாலம் தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு!

0
256

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் ஒன்றை விரைவில் அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

5 மாத காலத்திற்குள் புதிய மேம்பாலம் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். . 

அத்துடன், அதுவரை 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பம்பலப்பிட்டி ரயில் நிலையம்

தற்போதுள்ள மேம்பாலத்தை உடனடியாக அகற்றி விரைவாக நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட ஆபத்து : ஜனாதிபதி விடுத்த உத்தரவு | Bambalapitiya Railway Station Ranil Order

அதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.