நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் இன்று பதவி விலகுவேன் – பிரதமர் மகிந்த ராஜபக்ச

0
320

தனக்கு ஆதரவான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் இன்று பதவி விலகுவேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டினால் மாத்திரமே பிரதமர் பதவி விலகுவதாக முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.