தாடியிருந்தால் மட்டுமே அரச உத்தியோகம்! தலிபான் அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவு

0
330

ஆப்கானிஸ்தானில் தாடி இல்லாத அரசு ஊழியர்கள், அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தலிபான்கள் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்தே தலிபான்கள் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

அங்கு ஆண் ஒருவரின் துணையின்றி பெண்கள் விமானப் பயணம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது அரசு ஊழியர்கள் தாடி வைத்திருந்தால் மட்டுமே அலுவலங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இதையடுத்து அமைச்சரவை அலுவலகத்திற்குள் தாடி வைக்காமல் சென்ற அரச ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

எனினும் இந்த உத்தரவுக்கு தலிபான் ஆதரவாளர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாடி வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் ஒருபோதும் மக்களை வற்புறுத்தியதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.