சட்டத்தரணிகளால் முற்றுகையிடப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களம்!

0
368

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் குழுவொன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து தற்போதைய அரசாங்கம்  இராஜினாமா செய்யுமாறு கோரி அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமானது.

சில வழக்குகளை வாபஸ் பெறும் சட்டமா அதிபரின் முறைக்கு அவர்கள் இதன்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.