தமது அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு கோரி தோட்டத் தொழிலாளர்களும் காலி முகத்திடல் நோக்கி தற்போது பேரணியாகச் சென்று கொண்டுள்ளனர்.
கொழும்பு புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பித்து லோட்டஸ் வீதியின் வழியாக இந்து ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும், லோட்டஸ் வீதியில் பொலிஸாரினால் வீதித்தடை போடப்பட்டுள்ள நிலையில் வீதித் தடையை மீறாது லோட்டஸ் வீதி அருகே இருந்து இவர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.