ட்டுக்கோட்டை – பொன்னாலையிலும், காரைநகர் – வலந்தலையிலும் தமிழரின் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கையைத் தடுக்க அனைவரையும் அணி திரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியினை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்காக நில அளவை திணைக்களம் நாளை அப்பகுதிக்கு வருகை தரவுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மக்களை ஒன்றுகூடுமாறு அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.