ஈஸ்டர் தாக்குதல்: நிலந்தவுக்கு எதிரான மனு ஜூலையில் பரிசீலனை

0
131

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் ஜூலை 25இல், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இம்மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு திகதி வழங்குமாறு, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிலந்த ஜயவர்தன நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிணங்க உரிய ஆட்சேபனைகளை ஜூன் 25 அல்லது அதற்கு முன்பதாக தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ஜூட் ரொஹான் சில்வாவினால், இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.