ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் பாப்பரசர்!

0
335

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இன்று வத்திக்கானில் சந்திக்க உள்ளனர்.

இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் புனித பேதுரு பேராலயத்தில் பிற்பகல் விசேட ஆராதனை ஒன்றும் நடைபெறவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருடன் கொழும்பு பேராயர் கடந்த 21ஆம் திகதி வத்திக்கானுக்கு புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.