ஈரானிய ஜனாதிபதி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! வெளியான புதிய தகவல்

0
150

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளான இடத்தை தேடும் துருக்கிய ஆளில்லா விமானம், நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில், உலங்கு வானூர்தியின் உடைவுகளாக இருக்கலாம் என்று நம்பப்படும் வெப்ப மூலத்தை அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் உலங்கு வானூர்தியில் பயணித்தவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை. குறித்த எரியும் இடம் கண்டறியப்பட்டு, தவில் எனப்படும் அந்த பகுதிக்கு மீட்புப் படைகள் அனுப்பப்பட்டு வருவதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும், துருக்கிய ஆளில்லா விமானம் வெப்ப மூலத்தை அடையாளம் கண்டு அதன் ஒருங்கிணைப்புகளை ஈரானிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டது என்று துருக்கிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

UPATE 2

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் உட்பட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியை கண்டுபிடித்ததாக மீட்பு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் ரைசி உட்பட அதில் பயணித்த எவரும் உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்று ஈரானிய செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

எனவே, அந்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஜனாதிபதி ரைசி உட்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.