இலங்கை மத்திய வங்கியின் இந்த வருடத்திற்கான மீளாய்விற்கான ஊடக அறிக்கை பிடிபோடப்பட்டது!

0
398

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படவிருந்த அறிக்கையொன்று பிற்போடப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான 03 ஆம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை இன்றைய தினம் முற்பகல் 07.30 இற்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் குறித்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், 2022 ஏப்ரல் 05 ஆம் திகதியன்று நடைபெறவிருந்த ஊடக மாநாடும் பிற்போடப்பட்டுள்ளது. ஊடக அறிக்கை மற்றும் ஊடக மாநாட்டுக்கான அறிவிப்பு திகதி விரைவில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.