லெபனானில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவரின் உறவினர்களை அடையாளம் காண இலங்கையின் வெளிவிவகார அமைச்சு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.
இலங்கையை சேர்ந்த திருமதி ஜெயசூரியகே பிரியந்திகா நீலகந்தி என்ற பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக விவகாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை பிரஜை இன்று (01-03-2023) லெபனானில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி ஜயசூரியகே பிரியந்திகா நீலகந்தியின் பின்வரும் விவரங்களை அமைச்சு பகிர்ந்து கொண்டுள்ளது.
அடையாள அட்டை இலக்கம்: 797631574v
கடவுச்சீட்டு எண்: N5758240
முகவரி : 117, யாயா 06, வரவெவ, சிலாவ் & 247/3, ஹபரகட, ஹோமாகம.
இதேவேளை, உயிரிழந்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், அமைச்சகத்தின் நேரடி தொலைப்பேசி இலக்கம் 011238836 / 0117711163 / 0112323015 அல்லது அதன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.