(Ameth Weerasinghe stops hunger strike Anuradhapura Prison)
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க இன்று போராட்டத்தைக் கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது முக்கிய சூத்திரதாரியான இவர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டார்.
இதனிடையே தன்னை விடுவிக்குமாறு கோரி அமீத் வீரசிங்க, கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
எனினும், இன்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, கண்டி வன்முறையில் ஈடுபட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டோருக்கு பிணை வழங்குமாறு சிங்கள தேசிய அமைப்பின் தலைவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றுத் முறைப்பாடு செய்திருந்தனர்.
(Ameth Weerasinghe stops hunger strike Anuradhapura Prison)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு
- புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிநாசினிக்கான தடையை நீக்க நடவடிக்கை
- பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- பலம்வாய்ந்த பாதாள உலக கோஷ்டியை உருவாக்கத் திட்டம்