அமீத் வீரசிங்க சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்

0
351
Ameth Weerasinghe stops hunger strike Anuradhapura Prison

(Ameth Weerasinghe stops hunger strike Anuradhapura Prison)

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க இன்று போராட்டத்தைக் கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது முக்கிய சூத்திரதாரியான இவர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனிடையே தன்னை விடுவிக்குமாறு கோரி அமீத் வீரசிங்க, கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

எனினும், இன்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, கண்டி வன்முறையில் ஈடுபட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டோருக்கு பிணை வழங்குமாறு சிங்கள தேசிய அமைப்பின் தலைவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றுத் முறைப்பாடு செய்திருந்தனர்.

(Ameth Weerasinghe stops hunger strike Anuradhapura Prison)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites