இலங்கை- ஈரான் இடையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிட்ட அறிவிப்பு

0
37

ஈரான் இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாசாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.