கிளிநொச்சியில் நடு வீதியில் குடும்பஸ்தர் படுகொலை

0
46

தர்மபுரம் பகுதியில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியை பார்வையிட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 30 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிஸ் என்ற குடும்பஸ்தர் வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் ஒருவர் தருமபுர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.