சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
52

கடந்த மாதத்தில் மாத்திரம் 291,081 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

அத்துடன், இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து 31, 853 பேரும், ரஷ்யாவில் இருந்து 28, 016 பேரும் ஜேர்மனியில் இருந்து 18, 324 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.