கெஹலிய உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
55

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்கள் 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைவரும், ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.