முஸ்லிம் பாடசாலையாக மாற்றப்படும் தமிழ் பாடசாலை: வெடித்தது புதிய சர்ச்சை

0
37

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

குறித்த பாடசாலையின் அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பதவி முத்திரையை பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த கட்சியின் பேச்சாளர் சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் நியமனம் வழங்கப்பட்ட கல்லூரியின் தற்போதைய அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற முத்திரையை பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்க் கலவன் பாடசாலை 

இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அரசினர் முஸ்லிம் கலவன்பாடசாலை என்ற பதவி முத்திரையைப் பயன்படுத்தி அதிபர் கையொப்பம் வைத்துள்ளமை யாரைத் திருப்திப்படுத்துவதற்காக என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மாணவர்கள் பழைய மாணவர்கள் பிரதேச மக்கள் கவனத்தில் எடுப்பார்களாக எனவும் அவர் வினவியுள்ளார்