ரணிலின் பிரச்சார தலைவராக வருவதற்கு கடும் போட்டி

0
31

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரத்தின் தலைவராக இருப்பதற்கு பலத்த போட்டி நிலவுவதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தனவும் போட்டியில் இணைந்துள்ளார். இன்று (27) முதல் மே 1 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பிரசார பவனியை அவர் ஏற்பாடு செய்துள்ளார். இந்த பவனி மே தினப் பேரணி நடைபெறும் இடத்தை வந்தடைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணி

இதற்கு முன்னர் சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம், ஹரின் பெர்னாண்டோ, ரவி கருணாநாயக்க போன்றவர்கள் இது போன்று பல்வேறு பிரசார திட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.