சற்றுமுன் சி.ஐ.டி யில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன: பரப்பரப்பாகும் தென்னிலங்கை

0
51

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கடந்த 22ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) நேற்று அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் அவர் இன்று (24) வாக்குமூலம் வழங்கவுள்ளதாக மைத்திரிபால சிறிசேனவை மேற்கோள்காட்டி பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ நேற்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், அவரை கைது செய்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

“இதுவரை காலம் உண்மை வெளிகொணரப்படாமைக்கான காரணம் என்ன”? என்று கேள்வி எழுப்பட்ட நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே இந்த தகவலை அறிவித்ததாக மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய சாட்சி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் பகிரங்க சாட்சி வழங்கினால் தனது உயிருக்கும் தனது குடும்பத்தவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மைத்திரியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போாது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பேசுபொருளாகவும் மாறியுள்ளது.