அதிகரிக்கும் இணைய மோசடிகள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
58

இலங்கையில் தனிநபர் மீதான இணைய மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளங்கள் வாயிலாக குறித்த மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், பிரமிட் திட்டங்களுக்கு எனக் கூறி மக்களிடம் இருந்து இணைய வெளியில் பணம் கொள்ளையிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய வழியாக பல போட்டிகள் நடப்பதாகவும் அதற்கு வாக்களிக்குமாறும் கோரி நண்பர் கோரிக்கைகளை அனுப்பி மோசடி செய்பவர்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக முகநூல் பக்கத்தில் இருந்து பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.