“நீதி கிடைக்க வேண்டுமானால் முதலில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்”

0
71

‘எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பசில் சிறந்த விடயத்தை பரிந்துரைத்துள்ளார். முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள். இல்லையேல் ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறுகிறதோ அந்த கட்சிக்கு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும். நீதி கிடைக்க வேண்டுமானால் முதலில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்”.என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்று (22) காலை அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதியை வழிபட வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளார்.