பாடசாலை அதிபர்களுக்கு விசேட அறிவித்தல்

0
62

2024 ஆம் ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைத் துணிகள் இதுவரை தங்கள் பாடசாலைகளுக்கு கிடைக்கவில்லையெனில் தமக்கு அறிவிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களிடமும் கல்வி அமைச்சு இன்று கோரியுள்ளது

அனைத்துப் பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைத் துணிகள் நாட்டிலுள்ள பிரதேசக் கல்வி அலுவலகங்கள் ஊடாக அனைத்து அரச பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்களை பின்வரும் தொலைபேசி, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் ஊடாக உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.