கெஹலியவுக்கு பிணை மறுப்பு

0
82

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான தடுப்பூசி விவகார வழக்கு நிறைவடையும் வரை அவர்களுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (14.03.2024) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிணை கோரிக்கை நிகராகரிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரின் பிணை கோரிக்கையை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.