பிள்ளையானின் முக்கிய பதவியை தூக்கி எறிந்துவிட்டு ஓட்டமெடுத்த இந்து மத குருக்கள்!

0
84

பிள்ளையானின் முக்கிய பதவியை தூக்கி எறிந்துவெட்டு இந்து மத குருக்கள் வெடுக்குநாறி மலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலைவர் பணிக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய கட்சியின் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா வடக்கு ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற அநீதிக்கு எதிரான போராட்டத்தில் குறித்த இந்துமத குருக்கள் கலந்து கொண்டிருந்தார்.

போராட்டத்தில் அவர் பிள்ளையானுக்கு எதிராக பதாதையினையும் ஏந்தி எதிர்ப்பினை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அவர் பிள்ளையான் வழங்கிய பதவியிருந்து விலகியுள்ளார்.

அதேவேளை பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பலரும் விலகிச்செல்லுகின்ற நிகழ்வானது முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.