இலங்கைப் பொலிஸாரின் அராஜகம்; கைவிலங்குடன் சிகிச்சைக்கு வந்த ஆலய பூசகர்

0
79

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.

கடந்த வெள்லிக்கிழமை இடம்பெற்ற மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைவிலங்குடன் சிகிச்சை

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை (10) குறித்த 8 பேரையும் மன்றின் உத்தரவுக்கமைய வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அழைத்து சென்றிருந்தனர்.

குறித்த 8 பேரினதும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்களை வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அதேசமயம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைவிலங்குடன் அவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்