திருக்கோணேஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி பெருவிழா; இந்தியாவில் இருந்து பிரபலங்கள் இறக்குமதி!

0
81

இவ்வாண்டு மஹா சிவராத்திரி பெருவிழாவினை திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளது. மகாசிவராத்திரியின் திருவிழா இந்த ஆண்டு மார்ச் 08ஆம் தேதி அன்று வருகிறது.

ஆதீன சமயப் பெரியார்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள்

மஹா சிவராத்திரி தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினருடனான சந்திப்பு ஒன்றினை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம் (02) முன்னெடுத்தனர்.

அந்த வகையில் மஹா சிவராத்திரிக்கு முந்தைய ஐந்து தினங்கள் அதாவது இன்று 03 ஆம் திகதி தொடக்கம் 07ஆம் திகதி வரை திருக்கோணேஸ்வரப் பெருமானின் ஆலய வளாகத்தில் மாலை நேரங்களில், இந்தியாவிலிருந்தும் இலங்கையில் இருந்தும் ஆதீன சமயப் பெரியார்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் மற்றும் கர்நாடக இசை வல்லுநர்கள் வருகை தந்து எம்பெருமானின் மஹா சிவராத்திரி நிகழ்வினை வெகு விமர்சையாக சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இன்றைய சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.