முன்னாள் அமைச்சர் கெஹலியவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0
124

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் 7 பேரும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய தரமற்ற  இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (15) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி

முன்னாள் அமைச்சர் கெஹலியவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | 7 People Including Keheliya Remanded Again

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 02 ஆம் திகதி காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்தார்.

10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.