விஷம் அருந்தி தந்தையும் மகனும் உயிரிழப்பு.. பலவந்தமாக கொடுக்கப்பட்டதாக சந்தேகம்

0
104

அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸ் விசாரணை

இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நேற்று (14.2.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அங்குனகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மகனுக்கு தந்தை செய்த கொடூரம் ; மீட்கப்பட்ட 2 சடலங்கள் | Brutality Father To Son 2 Dead Bodies Recovered

50 வயதுடைய தந்தை தனது 20 வயது மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் வைத்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தந்தை மற்றும் மகன் இருவரின் சடலங்களும் அங்குனகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.