தனது அரசியல் வாழ்வை யாராலும் அழிக்க முடியாது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிபடத் தெரிவித்துள்ளார். வீடுகளுக்கு தீ வைத்து சொத்துக்களை அழித்து அச்சுறுத்தி எனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது எனவும், கம்பஹாவில் உள்ள மக்கள் நன்றியறிதல் கொண்டவர்கள். அவ்வாறானவர்கள் இருக்கும் வரை ஒரு அடியேனும் பின்வாங்க நான் தயாரில்லை என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.