ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று புதன்கிழமை (07) காலை ஜனாதிபதியின் தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்றம் வந்த ஜனாதிபதியை சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தினார்.
அத்துடன், இன்றைய ஆரம்ப நிகழ்வில், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.