பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் சிறுகோள்! அபாயகரமானதா?

0
146

பூமியை நோக்கி சுமார் 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.41 மணிக்கு நமது கிரகத்தை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.

அந்த சிறுகோள், சுமார் 890 அடி விட்டம் கொண்டதாகும். என்றாலும், அந்த சிறுகோள் பூமியின்மீது மோதும் அபாயம் இல்லை என நாசா கூறியுள்ளது.

இது தொடர்பில் Dr Minjae Kim என்னும் அறிவியலாளர் கூறும்போது,

குறித்த சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதுபோல் தோன்றினாலும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையாது என்பதால், அதுதொடர்பில் அதிகம் கவலையடைய தேவையில்லையென தெரிவித்துள்ளார்.

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள்! ஆபத்து ஏற்படுமா? | Dangerous Asteroid Coming Towards The Earth

மேலும், நமது சூரிய அமைப்பில், அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 2,350 சிறுகோள்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.