அயோத்தி ராமர் கோவிலுக்கு குவியும் நன்கொடை: முதல் நாள் வசூல் தொகை இவ்வளவா?

0
166

இந்தியாவில் பல நூற்றாண்டுகள் நிலவிய சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேகம் கடந்த 22ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெற்றது.

ஸ்ரீபால ராமர் கோயில் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு அடுத்த நாள் முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கோயிலின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய கோயில் அறக்கட்டளை சார்பில் பக்தர்களிடம் நன்கொடையும் கோரப்பட்டிருந்தது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து, கோயில் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு நன்கொடை வந்துள்ளதாக அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கோயில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு பாரிய அளிவில் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ராமர் கோயிலுக்கு, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் நாளில் ஆன்லைன் மூலம் ரூ.3.17 கோடி அளவுக்கு நன்கொடை வந்துள்ளது.

கோயிலில் 10 இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடப்பட்டிருக்கும் ரொக்கப் பணம், காசோலை, வரைவோலைகள் இன்னமும் எண்ணப்படவில்லை.

கடந்த செவ்வாயன்று 2.5 இலட்சம் பேர் கோயிலுக்கு வந்திருந்த நிலையில், புதன்கிழமை சுமார் 5 இலட்சம் பேர் வந்திருப்பார்கள் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், பக்தர்களிடமிருந்தும், பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் ஏராளமான பரிசுபொருள்களும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் நிம்மதியாக கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.