தாமரை வடிவிலான புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

0
204

தாமரை வடிவிலான புதிய வானியல் செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது. ஐன்ஸ்டீன் புரோப் (EP) என்ற இந்த செயற்கைக்கோள் லாங் மார்ச்-2சி என்ற ராக்கெட் மூலம் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்ரே கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த செயற்கைக்கோள், வானியல் நிகழ்வுகளை படம்பிடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபஞ்சத்தில் வாணவேடிக்கைகளைப் போல ஒளிரும் மர்மமான நிலையற்ற நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக இந்த செயற்கைக் கோள் சுமார் 1.45 டன் எடை கொண்டது.

முக்கிய நோக்கம்
தாமரை வடிவிலான புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா | China Launches New Lotus Shaped Satellite

மலர்ந்த தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை கோலில் 12 இதழ்கள் மற்றும் இரண்டு மகரந்த தண்டுகள் போன்ற அமைப்புகள் உள்ளதுடன் அதில் 12 இதழ்களும் நீண்ட தொலைவை கண்காணித்து படம் பிடிக்கும் எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் கொண்ட 12 தொகுதிகளாகும்.

இதேவேளை இரண்டு தண்டுகள் போன்ற அமைப்பில் குறுகிய தொலைவை கண்காணிக்கும் எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் உள்ளன. இந்த பூமியையும் தாண்டி விண்வெளியில் நடைபெறும் வித்தியாசமான பல நிகழ்வுகளை கண்காணிப்பதே இதன் முக்கிய நோக்கம் என சீன விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.