இலங்கையில் இரு முக்கிய வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் புதிய லேபரோஸ்கோப் இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த லேபரோஸ்கோப் இயந்திரம் செயலிழந்துள்ளதால் 100க்கும் மேற்பட்ட நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.