மகளின் திருமண முடிவை ஏற்க மறுப்பு: மகளை கொலை செய்த குடும்பத்தினர்!

0
122

இத்தாலியில் பொலோக்னா நகருக்கு அருகே நொவெல்லாரா பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த சமன் அப்பாஸ் என்ற 18 வயது பெண் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 2020ல் உறவுக்கார ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு சமனை அவர் குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர்.

அதை அவர் மறுத்ததால் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக அந்நாட்டு அரசிடம் புகலிடம் தேடிய சமன் ஒரு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். 

மகளின் திருமண முடிவை ஏற்க மறுத்த குடும்பத்தினர்: இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Italy Family Beat The Daughter Marriage Love

கடந்த 2021ல் தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த சமன் வீட்டிலிருந்த தனது கடவுச்சீட்டை எடுத்து கொள்ள அங்கு சென்றார். அப்போது மீண்டும் திருமண சர்ச்சை ஏற்பட்டது. அவர் பெற்றோர் சமனின் ஆண் நண்பரை மருமகனாக ஏற்க மறுத்தனர்.

அன்றிலிருந்து சமன் திடீரென காணாமல் போனார். ஆண் நண்பர் இது தொடர்பில் பொலிஸாரிடம் அளித்த முறைப்பாட்டின் பேரில் அவர்கள் சமனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முற்பட்டனர். இருப்பினும் சமனின் பெற்றோர் தங்கள் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.

மகளின் திருமண முடிவை ஏற்க மறுத்த குடும்பத்தினர்: இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Italy Family Beat The Daughter Marriage Love

அப்பகுதியில் இருந்த காணொளி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று கையில் மண்வெட்டி, கடப்பாரை, பக்கெட் உள்ளிட்டவைகளுடன் 5 பேர் அவ்வீட்டை விட்டு வெளியே சென்று சுமார் 3 மணித்தியாலம் கழித்து திரும்புவது தெரிய வந்தது.

பொலிஸாரின் தேடலில் ஒரு ஆண்டு கழித்து சமனின் உடல் ஒரு பாழடைந்த பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டிருந்து.

இந்த சம்பவத்தில் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்த இத்தாலி அரசின் கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தானிலிருந்த சமனின் தந்தையும் பிரான்ஸிலிருந்த சமனின் மாமாவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தாயார் வேறு எங்கோ தப்பி ஓடி விட்டார். 

மகளின் திருமண முடிவை ஏற்க மறுத்த குடும்பத்தினர்: இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Italy Family Beat The Daughter Marriage Love

குடும்பத்தினரிடம் பொலிஸ் நடத்திய தீவிர விசாரணையில் சமனின் பெற்றோர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள மறுத்த மகளை கொலை செய்ய திட்டம் தீட்டினர். சமனின் கழுத்தை அவளது மாமா நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் தந்தைக்கும் தாய்க்கும் ஆயுள் தண்டனையும், கொலை செய்த சமனின் மாமாவிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கி இத்தாலி நீதிமன்றம் தீர்பளித்தது. மேலும் தாயாரை பொலிஸார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

மகளின் திருமண முடிவை ஏற்க மறுத்த குடும்பத்தினர்: இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Italy Family Beat The Daughter Marriage Love