தாய்,மகளின் விபசார விடுதி சிக்கியது

0
40

பெரிய வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபசார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த மூன்று பெண்களையும்  சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக    கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹந்தானை பிரதேசத்தில் பெரிய வீடொன்றிலேயே இவ்வாறு விபசாரம் செய்துவந்துள்ளனர்.

 விபசார மையத்தின் மேலாளராக மகளும், தாய் காசாளராகவும் பணிபுரிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபசார விடுதி தொடர்பில் இரண்டு வாரங்களாக விசாரணைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 5,000 ரூபாவிற்கு பெண்ணொருவரை கொள்வனவு செய்த போதே சந்தேகநபர்களை கைது செய்ததாக தெரிவித்தனர்.