கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அஞ்சலி..

0
179

யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மண்மீட்புக்காய் உயிரிழந்த மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுப்பட்டது.

நவம்பர் 27 ஆம் திகதியான இன்று மாவீரர் தினம் தமிழர்பகுதியெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

துயிலும் இல்லத்தில் இராணுவ  தலைமையகம்

மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அங்கு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது