சமிந்த விஜேசிறியை தண்டிக்குமாறு கோரி ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கடிதம் கையளிப்பு

0
136

அனுராத ஜயரத்ன உட்பட ஆளும் கட்சியின் 24 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு கடும் தண்டனை வழங்குமாறு கோரியே இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மீது கடந்த 10ஆம் திகதி சுமத்தப்பட்ட தீங்கிழைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கடிதம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உதவிப் பொதுச் செயலாளரை பாராளுமன்ற உறுப்பினர் அநாகரீகமான முறையில் நடத்தியதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவுக்கு எதிராக சபையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை இதற்கு முன்னதாக பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.