மின் கட்டணம் செலுத்தாததால் மஹிந்தவின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு

0
138

விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும் பின்னர் நேற்று மின்சார சபையினால் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்கு பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என அண்மையில் மின்சார சபை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வீரகெட்டியவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றதாகவும் அதற்காக பெறப்பட்ட மின்சாரத்திற்கு 2,682,246.57 ரூபாய் செலுத்தவில்லை எனவும் மின்சார சபை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.