தற்போது நடைபெற்று வரும் ‘பிக் பாஸ் கன்னட 10’ நிகழ்ச்சியில் பங்கேற்ற வர்தூர் சந்தோஷ் என்பவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (22.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கன்னட ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் புலி நகம் பதக்கத்தை அணிந்ததற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் பேரில் வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சந்தேகநபர் சந்தோஷை விசாரணைக்கு வெளியே அனுப்புமாறு ‘பிக் பாஸ்’ ஏற்பாட்டாளர்களிடம் வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள்
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவரிடம் பதக்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நகம் புலியிலிருந்து வந்ததா அல்லது வேறு விலங்கிலிருந்து வந்ததா என்பது குறித்தும் பொலிஸார் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்படுமானால், சந்தோஷுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கன்னட பிக் பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.