எதிர்வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் ஐந்து கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் – மோடி

0
195

எதிர்வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் ஐந்து கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்றாவது உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உலகின் செல்வாக்கு மிக்க நாடுகளின் வரிசையில் தற்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் இந்தியாவை புதிய நம்பிக்கையோடுப் பார்க்கின்றன.

எப்போதெல்லாம் நமது கடல்சார் திறன் வலிமையாக இருந்ததோ அப்போதெல்லாம் நமது நாடும் உலகமும் அதிக பலன் பெற்றுள்ளன.

இந்தியாவின் கடல்சார் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கென கொள்கைகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா மாற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் புரட்சிகர மாற்றங்களை நாம் கொண்டு வந்த வண்ணம் உள்ளோம்.” என தெரிவித்தார்.