இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; உள்நுழைகிறதா நேட்டோ!

0
191

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்ரோஷமான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கிலாந்து தனது ‘R08 குயின் எலிசபெத்’ எனும் போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப ஆலோசித்து வருகிறது.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் போர் கப்பல் தற்போது காசாவுக்கு அருகே நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு தருணத்தில் இங்கிலாந்தும் தனது போர் கப்பலை அனுப்ப யோசித்திருப்பது நேட்டோ நாடுகள் பாலஸ்தீனத்திற்கு எதிராக ஒன்று திரள்கிறதோ? எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.

கடுமையான தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருந்தது.

தீவிரமான இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: உள்நுழைகிறதா நேட்டோ | Israel Gaza War Involved Neto

மத்திய கிழக்கின் பலம் பொருந்திய நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அதுவும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விடயம் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் 5வது நாளாக காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.