பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர்: காசாவில் 20 குழந்தைகள் மற்றும் 120 சிறுவர்கள் உயிரிழப்பு

0
279

பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே போரில் 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த பதில் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 20 குழந்தைகள் மற்றும் 120 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் காசா பகுதியில் உள்ள ஹமாஸின் உளவுத்துறைத் தலைவரின் வீட்டைத் தங்கள் படைகள் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.