ஜனாதிபதி ரணிலுக்கு கோட்டாபய பாராட்டு

0
155

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை அடியோடு நிராகரித்து , சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என பகிரங்கமாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பாராட்டுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் கோட்டாபய மேலும் கூறுகையில், ஜனாதிபதிப் பதவியிலிருந்து நான் விலகியபோது புதிய ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவைப் பரிந்துரைத்திருந்தேன்.

ஜனாதிபதி ரணிலை பாராட்டும் கோட்டாபய | Gotabaya Praises President Ranil

வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை

அதற்கமைய நாடாளுமன்றம் அவரைப் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என்பதை அவர் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் காட்டி வருகின்றார்.

இலங்கை இறைமையுள்ள நாடு. இங்கு வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை என தெரிவித்த கோட்டாபய நாடாளுமன்றத்தை மீறி எவரும் முடிவுகளை எடுக்க முடியாது என்றும் கூறினார்.

அதோடு நாடாளுமன்றத் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். உண்மையில் அவர் சிறந்த தலைவர் எனவும் முன்னாள ஜனாதிபதி கோட்டபாய தெரிவித்தார்.